யாழ்ப்பாணத்தில் எட்டு வயது சிறுமியொருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமிக்கு கடந்த பதின்மூன்றாம் திகதி வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
யாழில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதுடன் சிறுமி வாந்தியும் எடுத்துள்ளார். இந்நிலையில் அதிகாலை நான்கரை மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பகல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
குடல்வளரி ஏற்பட்டதால் வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், அதனால் வாந்தி எடுத்தவேளை சுவாசக் குழாயினுள் வாந்தி சென்ற காரணத்தால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
