மொன்றியலின் ஜாக்-கார்டியர் (Jacques-Cartier) பாலத்திற்கு அருகில் இருந்த நூற்றாண்டு கால பழமையான கட்டிடம் ஒன்று, பயங்கரத் தீயினால் முழுமையாக எரிந்து தரைமட்டமானது.
இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகை நகரம் முழுவதும் பரவியதை அடுத்து, பாதுகாப்பு கருதி ஜாக்-கார்டியர் பாலம் பல மணிநேரம் மூடப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட போது எவராவது கட்டிடத்திற்குள் இருந்தார்களா என்பதைக் கண்டறிவதற்காக, மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.
இந்தக் கட்டிடம் அதிகாரப்பூர்வமாக காலியாக இருந்தபோதிலும், வீடற்றவர்கள் அவ்வப்போது அங்கு தங்குவது வழக்கம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது.
இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
தீ விபத்து நடந்த இடத்திற்கு எதிரே உள்ள CSN தொழிற்சங்கத்தின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்குள்ள காற்றைச் சுத்திகரிக்கும் பணிகள் முடிந்த பின்னரே ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
