கனடிய லிபரல் அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை அறிவித்தபடி, அடுக்குமான குடியிருப்பு கட்டுமான கடன் திட்டத்தின் (ACLP) மூலம் வடக்கு கரையில் உள்ள லவால் மற்றும் டெர்ரெபோன்னில் 781 வாடகை வீடுகளை கட்டுவதற்காக 257 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை லிபரல் அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடனாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு லவாலில் உள்ள எக்ஸால் டி லா கான்கோர்டே திட்டத் தளத்தில் விமி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுற்றுலாத்துறை அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளருமான அனி கூட்ராகிஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த முதலீடு மூன்று பெரிய அளவிலான வீட்டுவசதித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்:
எக்ஸால் டி லா கான்கோர்டே: 268 குடியிருப்பு அலகுகள் கொண்ட இந்தத் திட்டத்திற்கு அரசாங்கம் 90 மில்லியன் டாலர் குறைந்த வட்டி கடன் வழங்குகிறது.மேலும் சென்ட்ரல் பார்க் லவால்: 960 குடியிருப்பு அலகுகள் கொண்ட இந்தத் திட்டத்தின் 4 மற்றும் 5ஆம் கட்டங்களுக்கு மொத்தம் 132 மில்லியன் டாலர் குறைந்த வட்டி கடன் வழங்கப்படஉள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெர்ரெபோன்: 94 குடியிருப்பு மற்றும் வணிக அலகுகள் கொண்ட இந்தத் திட்டத்திற்கு 34 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை முதலீடு செய்யப்படுகிறது.இந்த முதலீடுகள் வாடகை வீடுகளின் விநியோகத்தை அதிகரிப்பதோடு, நடுத்தர வர்க்க மக்களுக்கும் குடும்பங்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 செப்டம்பர் நிலவரப்படி, மத்திய அரசு 156,000க்கும் மேற்பட்ட வீட்டு அலகுகளின் கட்டுமானத்திற்கும், மேலதிகமாக 297,000 வீடுகளின் பழுதுபார்ப்பிற்கும் 57.57 பில்லியன் டாலர்களை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது.
அரசாங்க தரவுகளின்படி , இந்த நடவடிக்கைகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன என்றும் . அவற்றில் முதியோர், பழங்குடியினர், வீடற்றவர்கள் அல்லது வீடின்மை அபாயத்தில் உள்ளவர்கள், மற்றும் வன்முறையிலிருந்து தப்பிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
