திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் பகுதியில் இரண்டு யானை தந்தங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி சேருநுவர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த யானை தந்தங்களுடன் கைதானவர்கள் பாட்டாளிபுரத்தை சேர்ந்த 29 மற்றும் 34 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
