எரிபொருள் தொடர்பில் அச்சம் நிலவிய நிலையில், பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு உடன்பாட்டை முன்வைத்துள்ளது.
இதன்படி நகரங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிக்க உத்தேசித்துள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் எரிபொருள் போக்குவரத்து சீராக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பாரவூர்த்தி உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
