மொன்றியலின் மேற்குப் பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், ‘எக்சோ’ (Exo) பயணிகள் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வவுட்ரெயில்-ஹட்சன் (Vaudreuil-Hudson) வழித்தடத்தில் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
டோரியன் (Dorion) ரயில் நிலையத்திற்கு அருகே ‘கனடியன் பசிபிக் கன்சாஸ் சிட்டி’ (CPKC) நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.
இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தடம் புரண்ட பெட்டிகள் வெறுமையாக இருந்ததாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தின் காரணமாக வவுட்ரெயில் (Vaudreuil) மற்றும் செயின்ட்-அன்-டி-பெல்லுவ் (Sainte-Anne-de-Bellevue) ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இரு திசைகளிலும் இடைநிறுத்தப்பட்டது.
இதன் விளைவாக இன்று பகல் மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படவிருந்த 15-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
