மொன்றியலின் தெற்குக்கரை (South Shore) பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில், பதின்ம வயதுப் பெண் ஒருவர் மிக மோசமான காயங்களுடன் உயிருக்குப் போராடும் நிலையில் உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை 20-இல் (Highway 20) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலைத் தடுப்பில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது.
இந்தக் காரில் ஒரு பெண் மற்றும் இரண்டு பதின்ம வயது சிறுமிகள் என மொத்தம் மூவர் பயணித்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த ஒரு சிறுமி, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரை ஓட்டி வந்த பெண் மற்றும் மற்றொரு சிறுமிக்குச் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் கியூபெக் மாகாண பொலிஸார் (SQ) தெரிவித்துள்ளனர்.
