ஈரானின் உச்ச தலைவர் “அயதுல்லா அலி கமேனி” உயிரிழந்த நிலையில் தற்போது அந்நாட்டு அரசியலைப்பின் 111 வது பிரிவின்படி தற்கால தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்கால தலைவராக தெரிவான அயதுல்லா அலிரேசா அராஃபி ஈரானின் பாதுகாவலர் சபையின் உறுப்பினராகவும், மதக் கல்விக் கூடங்களின் தலைவராகவும், நிபுணர்கள் பேரவையின் மூத்த உறுப்பினராகவும் செயற்பட்டு வந்த ஒரு முக்கிய தலைவராவார்.
ஈரானின் உயர்மட்ட மதகுருமார்கள் கலந்துரையாடி இவரை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் .
அந்நாட்டின் நிபுணர்கள் பேரவை குழு கலந்துரையாடி புதிய உச்ச தலைவரை தெரிவு செய்யும் வரை, அயதுல்லா அலிரேசா அராஃபி ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனோடு இணைந்து முக்கிய தீர்மானங்களை எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
