Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கி தவிக்கும் 20,000 மாலுமிகள்

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது நிலவும் சூழல் உலகளாவிய கப்பல் போக்குவரத்துத் துறைக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளதாக சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆர்சனியோ டொமிங்குவேஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 20,000 மாலுமிகள் ஹோர்முஸ் நீரிணைக்குள் சிக்கியிருப்பதுடன், சுமார் 2,000 கப்பல்கள் அங்கிருந்து நகர முடியாமல் முடங்கிக் கிடப்பதாக அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கப்பல்கள் நீண்ட காலம் அங்கேயே தங்கியிருப்பதால், மாலுமிகள் கடும் மன உளைச்சலுக்கும் உடல் ரீதியான சோர்வுக்கும் ஆளாகியுள்ளனர்.

அத்துடன் கப்பல்களைத் தொடர்ந்து இயக்குவதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பும் குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், கப்பல்களுக்கான இழப்புகளைப் பொறுப்பேற்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்து வருவதுடன், பல நிறுவனங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன அல்லது மிக அதிகப்படியான தவணைக் கட்டணங்களை வசூலிக்கின்றன.

தற்போது நீரிணையைச் சுற்றியுள்ள நாடுகள் வழங்கி வரும் நிவாரண உதவிகளால் ஒரு மனிதாபிமான நெருக்கடி தவிர்க்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் பாதுகாப்பாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்கு ஏதுவாக ‘மனிதாபிமான வழித்தடம்’ ஒன்றை உருவாக்குவதற்கு சர்வதேச கடல்சார் அமைப்பு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இதேவேளை, கப்பல்களுக்குப் பாதுகாப்புடன் கூடிய வழித்துணையை வழங்குவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என டொமிங்குவேஸ் விமர்சித்துள்ளார்.

வர்த்தகக் கப்பல்கள் இலக்கு வைக்கப்படாது என்பதற்கோ அல்லது அப்பாவி மாலுமிகள் உயிரிழக்க மாட்டார்கள் என்பதற்கோ எந்தவித உத்தரவாதமும் இல்லாததே இதற்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி தொழில்நுட்ப உலகில் பேரதிர்ச்சி – முடங்கியது Sora AI
அடுத்த செய்தி ஏர் கனடா நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இவ்வாண்டில் இதுவரை 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

பிப்ரவரி 22, 2025
உலகம்

இஸ்ரேல் மீது எந்த ஏவுகணையையும் ஏவவில்லை ஈரான் அறிவிப்பு!

ஜூன் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகை மீட்பு – நெளுக்குளம் பொலிஸார் அதிரடி

மே 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?