யாழ்ப்பாணம் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் நேற்றைய தினம் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இருவரில் ஒருவர் கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் இன்று பருத்தித்துறை கொட்டடி மீனவர்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பாக கொட்டடியைச் சேர்ந்த 24 வயதுடைய நவரத்தினம் நிச்சன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
தற்பொழுது இறந்த இளைஞனின் சடலம் தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
