கடற் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மீனவர்கள் கடற் சீற்றத்தால் முடங்கியுள்ள கடற்ப்படை வேடிக்கை பார்க்க முல்லைத்தீவு கடற்கரையோரமாக வந்த இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
முல்லைத்தீவு உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள கடற்பகுதியில் சீரற்ற காலநிலையால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை
இதை சாதகமாக பயன்படுத்திய இந்தியன் இழுவை மடி மீனவர்கள் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து இழுவை மடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான கடல் வளத்தை கடற்சீற்றத்தால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து போராடும் நிலையில் அவர்களின் கண்முன்னே சட்டவிரோத முறையில் அழித்துச் செல்கிறார்கள்.
முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் சாலை பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளங்கள் அமைந்திருக்கின்ற போதிலும் கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழில் செய்து வருகிறார்கள்.
முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்திய இழுவை மடி மீனவர்கள் அழித்துச் செல்வதை தடுப்பதற்கு இதுவரை எந்தவித நிரந்தர முயற்சிகளையும் உரியவர்கள் எடுக்கவில்லையென மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


