இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவையொட்டி நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப (IT) கணினி மத்திய நிலையத்தை மட்டக்களப்பு கொட்டியமுனை கனிஷ்ட வித்தியாலயத்திற்கு நேற்று கையளித்துள்ளனர்.
குறித்த தகவல் தொழில்நுட்ப (IT) கணினி மத்திய நிலையத்தை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் நேரடி வழிகாட்டலின் கீழ் வழங்கப்பட்டதுடன், முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ள ஆய்வகமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கணினி மத்திய நிலையத்தில் 15 நவீன கணினிகள், மின்சாரத் தடையைத் தவிர்க்கும் UPS கட்டமைப்பு மற்றும் அதிவேக இணைய வசதிகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆய்வகத்திற்குத் தேவையான அனைத்து கணினி மேசைகள் மற்றும் நாற்காலிகளை மட்டக்களப்பு ரோட்டரி கழகம் (Rotary Club) வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
