நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற நிலையில், நுவரெலியா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த வரையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வலப்பனை, மதுரட்ட மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேசங்களுக்கே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அதிகாரிகள் முன்னெடுத்து வருகினறனர்.
ஆகவே பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பீதியடைய செய்ய வேண்டாமென மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
