கியூபெக் மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளையும் 2030-ஆம் ஆண்டுக்குள் மின்சாரப் பேருந்துகளாக மாற்றும் திட்டத்தில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த இலக்கு “மிகவும் சவாலானது” என்று கியூபெக் மாகாண அரசு ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ‘ஹைபிரிட்’ (Hybrid) பேருந்துகளுக்கு மானியம் வழங்க கியூபெக் மாகாண அரசு முடிவு செய்துள்ளது.
கியூபெக் மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜொனாதன் ஜூலியன் இந்த தகவலை அறிவித்தார்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட ‘ஹைபிரிட்’ பேருந்து மானியங்கள், தற்போது 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
