கியூபெக் மாகாணத்தில் குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க உதவி கோரும் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட உதவி கோரும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தஞ்சம் வழங்குவதற்கான போதிய இடவசதி இல்லாமையே, இந்த நிராகரிப்புக்கான பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் பணியாற்றும் கூட்டமைப்பு (Regroupement) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டில் சுமார் 11,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குக் காப்பகங்களில் இடமளிக்கப்பட்டது.
ஆனால், அந்த எண்ணிக்கைக்கு மேற்பட்ட பெண்களுக்கு புகலிடம் வழங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப் பட்டுள்ளது.
மேலும், காப்பகப் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களை விடக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது.
இதனால் ஊழியர்கள் பணியை விட்டு வெளியேறுவதும், காலிப் பணியிடங்கள் அதிகரிப்பதும் சேவையைப் பாதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
