பொலிஸாரால் நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன். 27,430 பேர் போலீசார் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
நேரடியாக குற்றங்களை செய்த 14 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 309 நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய 422 பேரும், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4826 பேர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
