நாட்டில் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்களால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அவ்வாறில்லாமல் உற்பத்தி துறையை நாம் மேம்படுத்த வேண்டும் அதனால் நம்முடைய நாட்டின் பொருளாதாரத்தை எட்ட முடியும் என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மேட்டு நில பயிர் செய்கையாளர்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (06) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
யு என் டி பி நிறுவனத்தின் நிதி உதவியுடன் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் விவசாயத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 25 விவசாயிகளுக்கு தலா 140,000 பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாட்டில் நிலவுகின்ற நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது பொருளாதாரம் மேம்பட வேண்டும். தனியே அரச நிறுவனங்களை அல்லது சேவை வழங்கும் நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதல்லாமல், எங்களுடைய நாடு ஒரு விவசாய நாடு என்ற வகையில் விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும்.
நாட்டில் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எங்களால் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.
