ஒன்டாரியோ மாகாணத்தின் நெடுஞ்சாலைகளில் கடந்த சில நாட்களாகக் கார்கள் மேம்பாலத் தடுப்புகளைத் தாண்டி கீழே விழும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை, ஓட்டுநர்களின் கவனக்குறைவே இத்தகைய விபத்துகளுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவித்துள்ளது.
சாலைகளில் பனி அகற்றும் போது, அவை ஓரங்களில் மலைபோல் குவிக்கப்படுகின்றன.
அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து இந்தப் பனிக்குவியல்கள் மீது மோதும்போது, அவை கார்களை ஏணி போலத் தூக்கி தடுப்புச் சுவருக்கு வெளியே எறிந்துவிடுகின்றன.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டொராண்டோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 வாகன மோதல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
