மளிகைப் பொருட்களின் விலை நாட்டில் அதிகரித்துள்ள நிலையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களுக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு திட்டமொன்றை முன்வைத்துள்ளது.
“கனடா மளிகைச் பொருட்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான பலன்” (Canada Groceries and Essentials Benefit) என்ற புதிய திட்டத்தை பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், தற்போதைய ‘ஜிஎஸ்டி’ (GST) வரித் திரும்பப் பெறும் தொகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், தனி நபராக இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு கூடுதலாக 400 டொலர் வரை கிடைக்கும் எனவும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்குச் சுமார் 800 டொலர் வரை கூடுதல் நிதி உதவி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் வழங்குவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், உணவுப் பொருட்கள் விலையை நிரந்தரமாகக் குறைக்கப் பிரதமர் கார்னி சில முக்கியத் திட்டங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.