கியூபெக் மாகாண வாகன காப்பீட்டு சபையின் (SAAQ) ‘SAAQclic’ இணையதளத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விதிகளை மீறி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும் அரசு கண்காணிப்பு அமைப்பு (AMP) அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொது நிதியை நிர்வகிப்பதில், கியூபெக் மாகாண வாகன காப்பீட்டு சபை நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டதாக, இன்று வெளியிடப்பட்ட 51 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 1.1 பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விட, இரண்டு மடங்கு அதிக செலவை ஏற்படுத்தியுள்ளது.
கனடா போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைப்பதற்காக, டெண்டர் விடுவதற்கு முன்பே அந்த நிறுவனங்களுடன் ரகசியத் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாண வாகன காப்பீட்டு சபையே இந்த தகவல்களைப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
பெரிய திட்டங்களைச் சிறிய ஒப்பந்தங்களாகப் பிரித்து வழங்குவதன் மூலம், கியூபெக் மாகாண வாகன காப்பீட்டு சபையினர், உயர்மட்டக் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளனர் என்று, தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இந்தத் திட்டம் தொடர்பாக கியூபெக் மாகாண அமைச்சர்கள் சிலர் பதவி விலகிய நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த அறிக்கை, கியூபெக் அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
