உலகில் காட்டுத்தீயினால் பெரியளவில் பாதிக்கப்படும் நாடு அவுஸ்திரேலியாவாகும். இங்கு ஏற்பட்ட காட்டுத்தீயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த காட்டுத்தீயினால் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக விக்டோரியா மாநிலத்திற்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஆபத்தை கருத்தில் கொண்டு ஏராளமான மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ இன்னும் பல நாட்களுக்கு தொடரும் அபாயம் இருப்பதாக வானிலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


