எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலையொன்று வெடித்து சிதறியுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பினால் பல நூறு மைல்கள் வான்வெளியை சூழ அதிகம் புகை மூட்டமாக காணப்படுகின்றது.
இதனால் அந்நட்டு சிவில் விமானப் போக்குவரத்து பணியகம் குறித்த பகுதிக்குள் எந்தவொரு விமானமும் பறப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது..
குறித்த எரிமலை வெடித்த காரணத்தினால் இன்றும் நாளையும் செயற்படவிருந்த 11 விமானசேவைகளை இரத்து செய்வதாக எயார் இந்திய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகாசா டிஎயார், இண்டிகோ, கே.எல்.எம் ஆகிய நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


