தென் ஆபிரிக்காவின் வடக்கு சூடானில் உள்ள நைல் நதியில் பயணித்த 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைல் நதியில் பயணிகள் படகொன்று பயணித்துள்ளது. இப்படகு மூழ்கியதில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 30 பயணிகள் இப்படகில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
குறித்த படகானது, தைபா அல் – கவாட் மற்றும் டெய்ம் அல் கராய் ஆகிய கிராமங்களுக்கிடையிலேயே படகு பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மீட்பு நடவடிக்கையில் சுமார் 21 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.