டிசம்பர் 27, சனிக்கிழமை சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் டாக்கா கேபிடல்ஸ் மற்றும் ராஜ்ஷாஹி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரின் டாக்கா கெப்பிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளரும் பங்களாதேஷின் பந்து வீச்சு நிபுணராகவும் பணியாற்றிய மஹ்பூப் அலி ஜாகி, மாரடைப்பால் காலமானார்.
கில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டாக்கா கெப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டம் ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென மைதானத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“இந்த மிகப்பெரிய இழப்பின் போது அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் சகோதரத்துவத்திற்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
