விமானப் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு வாக்குறுதி அளித்த புதிய சட்டத் திருத்தங்கள் இன்னும் நடைமுறைக்கு வராமை காரணமாக, பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டாலும், அவை இன்னும் அமைச்சரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.
இதற்கிடையில், கனடா போக்குவரத்து முகவரகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட 88,000 புகார்கள் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
அமுலுக்கு வரவுள்ள சட்டத்திருத்தங்களின்படி, ஒரு விமானம் தாமதமானால், அது தனது கட்டுப்பாட்டை மீறிய செயற்பாடு என்பதை, விமானசேவை நிறுவனமே ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
தவறு செய்யும் விமான நிறுவனங்களுக்கு ஒரு புகாருக்கு சுமார் 800 டொலர் வீதம் அபராதம் விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
கனடாவில் கடந்த ஆண்டு நடந்த பல்வேறு வேலைநிறுத்தங்கள் காரணமாகப் புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


