Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வலி. வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தும் தேசிய மக்கள் சக்தினர்!

டிசம்பர் 24, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வலி. வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை தேசிய மக்கள் சக்தியின் குழப்பி வருகின்றனர். அவர்களின் பின்னணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் இருந்து பிரதேச சபை உறுப்பினர்களை தவறாக வழி நடத்தி . சபை கூட்டங்களையும் குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என வலி. வடக்கின் பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் குற்றம் சாட்டியுள்ளார்.

வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

வலி. வடக்கில் மல்லாகம் தெற்கு வீரபத்திரர் ஆலய வீதி , புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்குள் உள்வாங்கப்பட்டு , அந்த வீதியினை புனரமைக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்த வேளை தேசிய மக்கள் சக்தியின் வலி. வடக்கு பிரதேச சபை பெண் உறுப்பினரும் இன்னும் சில தேசிய மக்கள் சக்தியினை சேர்ந்தவர்களும் அப்பகுதியில் உள்ள ஒரு சிலரை அழைத்து வந்து வீதியின் அபிவிருத்தி பணிகளை இடை நிறுத்தியுள்ளனர் .

அது தொடர்பில் அறிந்து நான் , பிரதேச சபையின் செயலாளர், அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் தொழிநுட்ப உத்தியோகஸ்தர் ஆகியோர் அவ்விடத்திற்கு சென்று இருந்தோம்

அங்கு அவ்விடத்தில் நின்ற அப்பகுதியை சேர்ந்த சிலருடன் வீதியின் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் எடுத்து கூறி , அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த வேளை தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் அனுமதியின்றி அவ்விடத்தில் தொலைபேசிகளில் காணொளிகளை பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அவ்வேளை , நான் இவ்விடத்தில் காணொளி எடுப்பதனை நிறுத்துமாறு பணித்தேன். அதனையும் மீறி காணொளிகளை பதிவு செய்து என்னுடன் தர்க்கப்பட்டனர். பின்னர் வலி. வடக்கின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவர் நான் தன்னை தாக்க வந்ததாக , பொலிஸ் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளதாக அறிகிறேன். அது தொடர்பில் என்னிடம் இது வரையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

குறித்த வீரபத்திரர் ஆலய வீதி புனரமைப்பை தேசிய மக்கள் சக்தியினர் தடுத்து நிறுத்தியமையால் , தற்போது நாம் அந்த வீதிக்கான நிதியினை ஐயனார் ஆலய வீதிக்கு திருப்பி , தற்போது ஐயனார் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

வலி. வடக்கு பிரதேச சபையினால் கடந்த 06 மாத கால பகுதிக்குள் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் எமது பிரதேச அபிவிருத்திகளை தேசிய மக்கள் சக்தியின் திட்டமிட்டு குழப்பும் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மன்னாரில் சூடு பிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்!
அடுத்த செய்தி உலர் உணவு பொதிகளை வழங்குவதில் என்ன பிரச்சினை? (Video)

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மருதானை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய பெண் கைது

செப்டம்பர் 6, 2025
இலங்கை

10 கோடி ரூபாய் பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்ப்பு!

நவம்பர் 10, 2025
இலங்கை

யாழில் நாளை தேசிய பொங்கல் விழா.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள்…

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?