ஹொரவப்பொத்தான-கஹட்டகஸ்திகிலிய பிரதான வீதியில், லொறியொன்று வீதியை விட்டு விலகி பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் 10 வயது சிறுமி மற்றும் லொறி சாரதியின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை, மேலும் சம்பவம் குறித்து ஹொரவப்பொத்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
