மல்வத்து ஓயாவின் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி நாட்டின் ஏனைய ஆறுகளின் நீர் மட்டம் சாதாரணமாக இருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.


