அத்தனகலு ஓயாவில் ஆடைகளற்ற நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
அத்தனகல பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வட்டுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


