தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலை கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுத்தனர்.
“தையிட்டி எங்கள் சொத்து, எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி கோஷமிட்டனர்.
அத்துடன் தையிட்டியில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிரண்டித்தனமாக செயற்பட்டமையையும், அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமைக்கும் கண்டனங்களை தெரிவித்தனர்.

