கியூபெக் சுகாதாரத் துறை அமைச்சர் கிறிஸ்டியன் துபே (Christian Dubé) தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தின் புதிய சுகாதாரத் துறை அமைச்சராக சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சுகாதாரத் துறையை வழிநடத்தி வந்த கிறிஸ்டியன் துபே, கியூபெக் மாகாண மருத்துவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளார்.
மருத்துவர்களின் ஊதியம் மற்றும் வேலைப்பளு தொடர்பாகத் துபே கொண்டுவந்த புதிய சீர்திருத்தங்களை மருத்துவ சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன.
இந்த முரண்பாடு காரணமாக, சுகாதாரத் துறைக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி டொலர் நிதி தற்போது விநியோகிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் புதிய சுகாதாரத் துறை அமைச்சர் முடங்கிக் கிடக்கும் நிதியை விடுவிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


