முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கின் சாட்சி ஒருவரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் 12 ஆவது சாட்சி இன்றைய தினம் (05) சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இதற்கான பிடியாணையை பிறப்பித்துள்ளார்.
