வரலாற்றில் முதன்முறையாக, மத்திய அரசின் கொள்முதல் விதிகளில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கனடியப் பொருட்களை வாங்குவோம் (Buy Canadian) என்ற புதிய கொள்கை டிசம்பர் 16 ஆம் திகதி முதல் அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், இனி wஆட்டின் மத்திய அரசு மேற்கொள்ளும் பெரிய திட்டங்களில் வெளிநாட்டுப் பொருட்களுக்குப் பதில், கனடாவிலேயே உற்பத்தியாகும் பொருட்களுக்கும் கனேடிய தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்தத் திட்டமானது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், உலகளாவிய வர்த்தகப் போர்களுக்கு மத்தியில் கனடாவைத் தற்சார்பு நாடாக மாற்றவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்தக் கொள்கை $25 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மதிப்புள்ள பெரிய அரசு ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக வரிப் பூசல்கள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்தத் திட்டத்திற்குக் முக்கியக் காரணமாகும் எனவும் தெரிய வருகின்றது.
