ஓகனகன் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா அரசானது 400 குடியிருப்புகளில் வசிப்பவர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், அப்பகுதியின் முக்கியப் போக்குவரத்துப் பாதையான நெடுஞ்சாலை 97C-யையும் பகுதியளவு மூடியுள்ளது.
ட்ரவுட் ஹில் (Drought Hill) அருகே ஏற்பட்டுள்ள இந்தத் தீ விபத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உடனடியாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன், பீச்லேண்ட் சமூக மையம் (Peachland Community Centre) மற்றும் வெஸ்ட் கெலோனா ராயல் லீபேஜ் பிளேஸ் (West Kelowna’s Royal LePage Place) ஆகிய இடங்களில் அவசரகால மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
27 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தக் காட்டுத்தீ, போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் இரு திசைகளிலும் மூடப்பட்டிருந்தாலும், மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான போக்குவரத்து இரவு 6:30 மணிக்கு மேல் மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


