காத்தான்குடி பொலிஸ் பிரிவின் காத்தான்குடி 06 அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள சிகை அலங்கார நிலையத்தில் கத்திக்குத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞனொருவன் மீது மற்றுமொரு இளைஞன் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த வரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்யுள்ளதுடன் கத்தி குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு சில தினங்களாக வாய்த்தர்க்கம் கை கலப்பு இடம் பெற்று வந்த பிண்ணனியில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
