உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். அந்தவகையில் ஹங்கேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் மரதன் ஓட்டம் நடைபெற்றது.
அந்த மரதன் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் நீச்சல் உடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வித்தியாசமாக வேடமணிந்திருந்தனர்.
கடுமையான குளிரில் இத்தகைய உடையணிந்து அவர்கள் உற்சாகமாக மரதன் ஓட்டத்தில் பங்கேற்றனர்.
செல்லும் வழியில் குழந்தைகளுக்கு இனிப்புகள், மிட்டாய்களை வழங்கினர். குளிருக்கு நடுவே உடலின் வெப்பத்தை தக்கவைப்பதற்காக ஆங்காங்கே கூட்டமாக நின்று உடற்பயிற்சிகளை செய்தனர்.
அத்தோடு, பண்டிகையை வரவேற்கும் விதமாக கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.


