டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக , ஆறு பேருந்துகள் மற்றும் இரு கார்கள் அடுத்தடுத்து மோதி தீப்பற்றிக் கொண்டன .
இந்த சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், அடர்ந்த மூடுபனி காரணமாக ஆறு பேருந்துகளும், இரு கார்களும் அடுத்தடுத்து மோதிக் கொண்டதையடுத்து தீப்பற்றி எரிய தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதோடு 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் . இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானதால் , பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .


