வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களினால் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்ட கற்றல் உபகரணங்களை வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
ஆரம்ப நிகழ்வு கண்டாவளை கோட்டத்திற்குற்பட்ட புன்னைநீராவி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
சம நேரத்தில் ஏனைய பாடசாலைகளுக்கு மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் வழங்கி வைத்தனர்
