கியூபெக் மாகாண அரசுக்கும் நியூஃபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடார் மாகாண அரசுக்கும் இடையிலான Churchill Falls மின்சார ஒப்பந்தம், க்யூபெக் மாகாணத் தேர்தல் காரணமாக ஆபத்தில் சிக்கக்கூடும் என க்யூபெக் அரசு எச்சரித்துள்ளது.
33.8 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், 2026-ல் நடைபெற உள்ள கியூபெக் தேர்தலுக்கு முன் இறுதி செய்யப்படாவிட்டால், அரசியல் மாற்றம் ஏற்பட்டால் நடைமுறைக்கு வராமல் போகும் அபாயம் இருப்பதாக க்யூபெக் பொருளாதார அமைச்சர் கிரிஸ்டின் ஃப்ரெஷெட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நியூஃபவுண்ட்லாண்ட் & லாப்ரடார் முதல்வர் டோனி வேக்கம் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைத்ததாகவும், தேர்தல் காலக்கெடு முக்கியம் என்பதை அவர் புரிந்துகொண்டதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கிடையில், ஒப்பந்தத்தை சுயாதீன குழு மூலம் மறுபரிசீலனை செய்ய நியூஃபவுண்ட்லாண்ட் அரசு திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தத்தை சுயாதீன குழு மூலம்மறுபரிசீலனை செய்யநியூஃபவுண்ட்லாண்ட் அரசு திட்டமிட்டுள்ள நிலையில்,இந்த மின்சார ஒப்பந்தத்தின் எதிர்காலம் இரு மாகாணங்களின் அரசியல் முடிவுகளில் தங்கியுள்ளமை குறிப்பிட்டதக்கது .


