பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்துப் போராடுவதற்காக, இந்தியா, இத்தாலி ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என, இந்திய
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தியா வந்துள்ள இத்தாலியின் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானி, டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். கடந்த மாதம் புதுடில்லியில் நடந்த பயங்கரவாத சம்பவத்தின் போது இத்தாலி அரசிடம் இருந்து, இந்தியாவிற்கு ஆதரவளித்ததற்கு , வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 மாநாட்டில் இருநாட்டு பிரதமர்களும் சந்தித்தபோது, பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்ப்பதற்கான கூட்டு
முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.


