யோர்க் பிராந்தியப் பொலிஸார், கிரேட்டர் டொராண்டோ பகுதி (GTA) முழுவதும் செயல்பட்டு வந்த, பலதரப்பட்ட குற்றவியல் அமைப்புகளைச் சேர்ந்த 17 நபர்களைக் கைது செய்துள்ளனர்.
வன்முறையுடன் வீடுகளுக்குள் அத்துமீறிக் கொள்ளையிடல் (Home Invasions), ஆயுதமேந்திய கொள்ளைகள் மற்றும் போதைப்பொருள்
கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை இலக்கு வைத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகளின்போது, சுமார் 14.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப்பொருட்களையும் மூன்று துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இந்த குற்றவியல் வலையமைப்பு பொதுப் பாதுகாப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தியது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


