இங்கிலாந்தின் புகழ் பெற்ற கால்பந்து தொடர்களில் ஒன்றான பிரீமியர் லீக் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இன்று (4) நடைபெற்ற லீக் போட்டியில் அர்செனல் எஃப்.சி. மற்றும் பிரெண்ட்ஃபோர்ட் எஃப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டியில் தொடக்கத்தில் இருந்தே அர்செனல் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது.
இதன் பயனாக ஆட்டத்தின் 11ஆவது நிமிடத்தில் அர்செனல் அணிக்கு மைக்கெல் மெரினோ மூலம் முதல் கோல் கிடைத்தது.
இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் அர்செனல் அணி 1-0 என்ற கணகில் முன்னிலை பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் சிறப்பாக செயல்பட்டதுடன், எதிரணியின் கோலடிக்கும் முயறிச்சிகளையும் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+1ஆவது நிமிடத்தில் அர்செனல் அணியின் புகயா சகா கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்த்தார். மறுபக்கம் பிரண்ட்ஃபோர்ட் அணி வீரர்கள் கோலடிக்கும் வாய்ப்புகளை நழுவ விட்டனர்.
இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் அர்செனல் எஃப்.சி. அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் பிரண்ட்ஃபோர்ட் எஃப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு பிரீமியர் லீக் தொடரில் அர்செனல் அணி விளையாடிய 14 போட்டிகளில் 10 வெற்றி, 3 டிரா மற்றும் ஒரு தோல்வி என மொத்தமாக 33 புள்ளிகளை வென்று பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
