நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 481 என அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 345 எனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அசாதாரண காலநிலை காரணமாக 1,967 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பகுதியளவில் 50,173 வீடுகள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


