இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கட் இழப்பிற்கு 358 ஓட்டங்களை பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் விளாசினர்.
83 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட்டின் முதல் சதமாகும்.
அத்துடன் குறித்த தொடரில் விராட் கோலி 93 பந்துகளில் 102 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது சதத்தினை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
359 என்ற வெற்றி இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.
