இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இலங்கை மக்களுக்கு விசேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார்.
தற்போதுள்ள அனர்த்த நிலைமையில், வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன் போது தெரிவித்தார்.
இந்த அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்கும், வினைத்திறனாக நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் , வேறு எந்தவிதமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் இது பயன்படுத்தப்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இலங்கை மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் , ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் உண்டான சேதங்கள் மற்றும் அவசரகால அனர்த்த நிலைமைகளை நிர்வகித்தல், மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் அல்லது முன்பு இருந்ததை விட மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருதல் ஆகிய மூன்று கட்டச் செயன்முறைக்கும் அரசாங்கமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.


