கடுவெல, கொழும்பு, கொலன்னாவை மற்றும் களனி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றனர், இது ஒரு தீவிர கவலையாக மாறி வருகிறது என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
தெரிவித்துள்ளார்.
நீர் மட்டம் உயர்ந்தவுடன், படகு மூலம் மக்களை வெளியேற்றுவது மிகவும் கடினமாகவும் ஆபத்தானதாகவும் மாறும். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
கணிப்புகளின்படி, இன்றிரவு மிகக் குறுகிய காலத்திற்குள் நீர் மட்டம் அசாதாரணமாக உயரக்கூடும் எனவும் பொதுமக்களிடமிருந்து உடனடி நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பு அவசியம் எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
