மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாதிக்கப்பட்ட கொழும்பு – ஹல்துமுல்ல பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் ஒரு வழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து குறித்த பகுதியில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தொடரும் அதிக மழை காரணமாக பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் 30 பேர் பெட்டிகல பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போது மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி எதிர்காலத்தில் திறக்கப்பட்டாலும், போக்குவரத்தை ஒருவழி போக்குவரத்தாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்று கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்
.
