இலங்கையில் அதிகளவான விபத்து பதிவாகி வருகின்ற நிலையில் பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பாதசாரி கடவையொன்றில் வீதியைக் கடந்த பாதசாரி ஒருவர் மீது வேன் ஒன்று மோதிய போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த பாதசாரி பொலன்னறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவையைச் சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
