இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொரி ஒன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டனில் உள்ள டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் குறித்த லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, மேலும் கனமழை மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக வீதி தெரியவில்லை என்று சாரதி தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த சாரதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


