இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி வீதியிலுள்ள உடவலவ பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் ஒன்று பேருந்துடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த காரின் ஓட்டுநர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், பாணந்துறை – களுத்தறை வீதியில் நடந்த விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேன் ஒன்றும் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
